/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்யலாம்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்யலாம்
PUBLISHED ON : செப் 17, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இணைந்து, அடுத்த மாதத்தில் துவங்கி, 25 நாட்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில் நடக்கும் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். குறிப்பாக, ஆதார் எண்ணுடன் முதலில் பதிவு செய்யும், 30 பேருக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
044 -2726 4019 86085 30454.