/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வெள்ளாடு வளர்ப்புக்கு ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
/
வெள்ளாடு வளர்ப்புக்கு ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
வெள்ளாடு வளர்ப்புக்கு ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
வெள்ளாடு வளர்ப்புக்கு ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
PUBLISHED ON : டிச 24, 2025

த மிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இணைந்து, 'நான் முதல்வன், வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, 25 நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், ஜன.,6ல் துவங்கும் பயிற்சிக்கு, 18 --- 35 வயது வரை வரையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.
குறிப்பாக, தினசரி பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பதிவு செய்வதால், ஆதார் எண் மற்றும் போட்டோ ஆகிய ஆவணங்களுடன், www.tnskill.gov.in என்கிற இணையதள முகவரியில், ஜன., 2 வரை முன்பதிவு செய்யலாம்.
முதலில் பதிவு செய்யும், 25 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு:
- -கே.பிரேமவல்லி,
97907 53594.

