sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கொய்யா சாகுபடியில் அந்துப்பூச்சி கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

/

கொய்யா சாகுபடியில் அந்துப்பூச்சி கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

கொய்யா சாகுபடியில் அந்துப்பூச்சி கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

கொய்யா சாகுபடியில் அந்துப்பூச்சி கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு


PUBLISHED ON : டிச 17, 2025

Google News

PUBLISHED ON : டிச 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொய்யா சாகுபடியில் அந்துப் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கான கரைசல் தயாரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய, தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:

கொய்யா சாகுபடியில், அந்துப் பூச்சிகள் முட்டைகளை இலை, பூக்கள், காய்களின் மீது இடுகின்றன. இது, சிறிய அளவிலான புழுவாக வளர்ந்து, பழங்களை சேதப்படுத்துகிறது.

சில நேரங்களில் பழுக்கும் முன், கொய்யா காய் உலர்ந்து உதிர்ந்து விடும். பல நேரங்களில் புழுக்கள் பழத்திற்குள் சென்று தாக்கும் போது, பழம் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாமல் மாறிவிடும்.

தாய் அந்துப்பூச்சிகளை ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி அமைத்து கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் துரிஞ்சியன் மருந்தை, லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்த கரைசலை, கொய்யா மரங்களின் மீது தெளிக்கலாம்.

அதே மருந்தை 10 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். இல்லையேல், மாலத்தியான் மருந்தை, ஏக்கருக்கு 300 மில்லி தெளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355






      Dinamalar
      Follow us