sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 07, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 07, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க. கதிரேசன், சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டு அளிப்பதில், மிகவும் குழப்பமாக உள்ளது. சிறந்த கட்சி மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது எப்படி?

ஊழல் இல்லாத கட்சி என்று மக்களால் எது போற்றப்படுகிறதோ, அந்தக் கட்சிக்கே ஓட்டளியுங்கள். இதில் குழப்பமே வேண்டாம்!

* ஆர். நாகராஜ், மதுரை: ஒரு பத்திரிகைக்கு, வாசகர் என்பவர் யார்? பணம் கொடுத்து பத்திரிகை வாங்கி படிப்பவர்களா அல்லது டீ கடை, நுாலகம் போன்ற இடங்களில் இலவசமாக படிப்பவர்களா?

எங்கு படித்தாலும், வாசகர்களே, பத்திரிகைகளின் முதலாளிகள்!



ஆர். ரவி, திருப்பூர்: என் நண்பன், பசிக்காத போதும் எதையாவது தின்கிறானே...

தனக்குத் தானே சவக்குழி பறித்துக் கொள்கிறார் என்பதே அர்த்தம்!

            

ஜெ. குமார், கன்னியாகுமரி: நான் விரும்புவதை எல்லாம் வாங்கக் கூடாது என்கிறாளே, என் மனைவி... இது சரிதானா?

சரி தான்! உங்களுக்கு எது தேவையோ, அதை மட்டுமே வாங்குங்கள். உங்கள் மனைவி, அதிபுத்திசாலி என்பதில் சந்தேகமில்லை!

* எஸ். சரவணன், மதுரை: நான் நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்?

நிறைய சம்பாதிக்க அறிவு வேண்டும்; சம்பாதித்ததை சேமிக்கவும், புத்தி வேண்டும்; சேமித்ததை சரியான முறையில் செலவழிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும். செய்வீர்கள் தானே!

            

க. வினாயகம், நெல்லை: அன்பர்கள், நண்பர்கள், தோழர்கள் என்பவர்கள் யார்?

அன்பர்கள், கை குலுக்குவர்; நண்பர்கள், கை கொடுப்பர்; தோழர்கள், தோளில் ஏற்றி துாக்கி விடுவர். இவர்களில் எந்த வகை என்பதை, நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!

எம். லதா, செங்கல்பட்டு: தலைக்கனம் என்றால் என்ன?

தலைக்கனம் இரண்டு வகைப்படும்... முதல் வகை, தன்னைப் பெரிதாக நினைத்துக் கொள்வது; அடுத்த வகை, பிறரைத் தாழ்வாக நினைப்பது. இரண்டு வகைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us