sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - மனித நேயத்தின் மகத்தான சேவை!

கவிதைச்சோலை - மனித நேயத்தின் மகத்தான சேவை!

கவிதைச்சோலை - மனித நேயத்தின் மகத்தான சேவை!


PUBLISHED ON : மார் 24, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முரண்டு பிடிக்காமல்

வாய்ப்பை விட்டுக் கொடுப்பது

ஏமாளித்தனம் அல்ல...

நட்பை விரிவடையச் செய்யும்

புத்திசாலித்தனத்தின் அடையாளம்!

எதிர்த்து பேசாமல்பணிந்து செல்வது

அடிமைத்தனம் அல்ல...

பெருமையை பறைசாற்றும்

உயரிய சிந்தனை!

ஆணவம் கொள்ளாமல்

அடக்கத்தோடு வாழ்வது

கோழைத்தனம் அல்ல...

எதிரியை வசப்படுத்தும்

ராஜ தந்திரம்!

கிள்ளி கொடுக்கும் இடத்தில்

அள்ளி கொடுப்பது

ஊதாரித்தனம் அல்ல...

தர்ம குணத்தை

உயரத்தில் நிறுத்தும்

பெருந்தன்மை மிக்க செயல்!

சந்தேக பிசாசை விரட்டி

நம்பிக்கை வளர்ப்பது

கோமாளித்தனம் அல்ல...

பிரிவினைக்கு தடைபோடும்

தாரக மந்திரம்!

உயிர்களின் இதயத்தில்

நேசத்தை நிரப்புவது

உணர்வுகளின் வெளிப்பாடு அல்ல...

உறவுகளை வலுபடுத்தும்

மனிதநேயத்தின்

மகத்தான சேவை!

—மணியட்டி மூர்த்தி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us