sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: வாழும் நெறி!

/

கவிதைச்சோலை: வாழும் நெறி!

கவிதைச்சோலை: வாழும் நெறி!

கவிதைச்சோலை: வாழும் நெறி!


PUBLISHED ON : டிச 14, 2025

Google News

PUBLISHED ON : டிச 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயத்தை கண்களிலும்

தயக்கத்தை செயலிலும்

காட்டும் மனிதனுக்கு

வெற்றி கானல் நீராகும்!

ஏற்றத்தில் பணிவும்

இறக்கத்தில் துணிவும்

இல்லாத மனிதனுக்கு

வாழ்வு நீர்த்துப் போகும்!

உழைப்பில் ஆர்வமும்

நம்பிக்கையில் உறுதியும்

இல்லாத மனிதனுக்கு

நிம்மதி அற்றுப் போகும்!

செயலில் தெளிவும்

இலக்கில் வேட்கையும்

இல்லாத மனிதனுக்கு

சாதனை தடைபடும்!

நாவடக்கத் தன்மையும்

பேச்சில் உண்மையும்

இல்லாத மனிதனுக்கு

வாய்மை பொய்த்திடும்!

நடத்தையில் ஒழுக்கமும்

பணியில் நேர்மையும்

இல்லாத மனிதனுக்கு

உயர்வு வீழ்ந்து போகும்!

எண்ணத்தில் துாய்மையும்

இறை நம்பிக்கையும்

இல்லாத மனிதனுக்கு

மனிதம் மறந்து போகும்!

தாழும் நிலை வேரறுத்து

புறம் தள்ளுவோம்

வாழும் நெறி சூளுரைத்து

வாழ்ந்து காட்டுவோம்!

- வி.சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு : 93603 83220.






      Dinamalar
      Follow us