sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

/

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!

கவிதைச்சோலை: வாழ்வை உயர்த்தும் சிறகுகள்!


PUBLISHED ON : ஏப் 06, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முயற்சியின் தொடக்கம்

தோல்வி என்றால்

விடாமுயற்சியின் முடிவு

வெற்றியின் ஆரம்பம்!

* பயமும் தயக்கமும்

நம்மிடம் இல்லை என்றால்

செயலும் பாதையும் ஒரே

நேர்க்கோட்டில் செல்லும்!

* ஊக்கமும் திறமையும்

உள்ளத்தில் வேரானால்

சாதிக்கும் சக்திகள்

ஆல விருட்சமாக வளரும்!

* நிதானமும் எளிமையும்

இரு கண்களானால்

என்னாளும் வாழ்க்கை

சிக்கலாக மாறாது!

* எதிர்கால லட்சியத்தை

வலுவாக முயற்சி செய்

அதை செய்து முடிக்கும்

மனஉறுதி தானே வரும்!

* சிந்தித்து செயல்படும்

ஆற்றலை உறுதி செய்

அதுவே மிகச் சிறந்த

வெற்றியின் நம்பிக்கை!

* பொறுமையும் மவுனமும்

பகைமை வீழும் ஆயுதம்

தேவையான நேரங்களில்

கடைபிடிக்க முயற்சி செய்!

* தோல்வி நிரந்தரமல்ல

காரணத்தை தேடாதே

வெற்றியின் காரணிகள்

கண்டறிய முயற்சி செய்!

* உயர்வு மூச்சு என்றால்

இலக்கை சுவாசம் செய்

அஞ்சாமை தடம் பதித்து

ஆற்றும் திறன் பதிவிடு!

* சில படிப்பினைகள்

உள்ளத்தில் வலி தரலாம்

அதை வலிமையோடு

அனுபவமாக மாற்றிவிடு!



—வி.சுவாமிநாதன், சென்னை.

மொபைல் எண் : 93603 83220







      Dinamalar
      Follow us