sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாவளி காரவகை டிப்ஸ்!

/

தீபாவளி காரவகை டிப்ஸ்!

தீபாவளி காரவகை டிப்ஸ்!

தீபாவளி காரவகை டிப்ஸ்!


PUBLISHED ON : அக் 20, 2024

Google News

PUBLISHED ON : அக் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலகாரங்கள் செய்வதற்கு அரிசி மாவு மற்றும் இதர மாவு வகைகளை மெஷின் அல்லது மிக்ஸியில் அரைத்ததுமே பயன்படுத்தாமல், நன்றாக சூடு ஆறியதும் உபயோகிக்கவும்.

* பலகாரம் செய்ய எந்த மாவை உபயோகிப்பதாக இருந்தாலும், அதை சலித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

* உளுந்து மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, முழு உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின்னர், மிக்ஸியில் நைசாகப் பொடித்து பயன்படுத்தவும்.

* கார ஓமப் பொடிக்கு, சிகப்பு மிளகாய் வற்றலை நைசாக மிக்ஸியில் அரைத்து உபயோகிக்க வேண்டும். மிளகாய்ப் பொடி நன்றாக அரைபடாவிட்டால் பிழியும்போது அச்சு துளைகளில் அடைத்து, பிழிய வராது.

* அரிசி மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, சாதாரண அரிசி மாவை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை பயன்படுத்துங்கள்.

* புதிதாக வாங்கிய எண்ணெயில் பலகாரங்களைச் செய்தால், பலகாரங்களின் கரகரப்பு, நன்றாக இருப்பதுடன், அவை நாள்பட பழைய வாசனை வராமல் இருக்கும்.

* மைதா மாவு, கடலை மாவு போன்றவற்றை உபயோகித்து செய்யும் கார வகைகளுக்கு புதிதான மாவையே பயன்படுத்த வேண்டும்.

* காராச்சேவு செய்யும் போது, மாவை சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம்.

* ரிப்பன் பக்கோடாவிற்கு, இரண்டு கப் கடலைமாவுக்கு, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து செய்வது சரியான விகிதம். ரிப்பன் பக்கோடாவை நன்றாக சிவக்க வேகவைத்து எடுப்பது நல்லது.

* மகிழம்பூ, தேன்குழல் போன்ற பலகாரங்களுக்கு உபயோகிக்கும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நைசாக அரைத்து, பின்னர் சலித்து வைத்துக் கொள்ளவும்.

* எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம்.

* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.

* எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.

* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.

* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.

* வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.






      Dinamalar
      Follow us