PUBLISHED ON : அக் 13, 2024

அ நிறம் | அளவு
திபெத்தில் உள்ள கோவில்களில், பல வண்ண கொடிகளை தோரணமாக பறக்கவிடுவது வழக்கம். இப்படி கொடிகளை கட்டும் பழக்கம், புத்தர் காலத்தில் ஆரம்பமானதாக கூறுகின்றனர்.
புத்தர், இங்கு பிரார்த்தனை செய்யும் போது, அந்த ஓசை, கொடிகள் மீது பட்டு, ஆகாயம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது.
கொடிகளில் ஏற்படும் கிழிச்சலை வைத்து, பிரார்த்தனையின் பலனை தெரிந்து கொள்வராம்.
பல நுாற்றாண்டுகள் ஆகியும் கொடி கட்டும் பழக்கத்தை இன்னும் கைவிடவில்லை, திபெத் மக்கள்.
— ஜோல்னாபையன்
