sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 17, 2026 ,தை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஏப் 13, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.திருமுகில், கள்ளக்குறிச்சி: குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே பணம் சேமிப்பு பற்றி கற்பிப்பது அவசியமா?

மிக மிக அவசியம். உண்டியல் கொடுத்து, பணம் சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்!

*****

பி.சிவா, கல்லிடைக்குறிச்சி: 'தி.மு.க.,வினர், பொட்டு வைக்கக் கூடாது; கையில் கயிறு கட்டக் கூடாது...' என, அக்கட்சியின், அ.ராஜா கூறி இருக்கிறாரே...

தி.மு.க.,வில், பெரும்பாலானோர் ஹிந்துக்களே. ராஜா சொல்வதை, அவர்கள் கேட்பரா?

*******

* ந.மாலதி, துாத்துக்குடி: தங்கள் கட்சியில் வக்கீல்கள் இருந்தும், தங்கள் மீது உள்ள வழக்குகளுக்காக, தமிழக அரசியல்வாதிகள், வட மாநில வக்கீல்களை வைத்து வாதாடுவது ஏன்?

தமிழக வக்கீல்கள் மீது, நம்பிக்கை இல்லை போலிருக்கிறது; அதனால் தான், வட மாநில வக்கீல்களை அமர்த்துகின்றனர்!

*******

* எஸ்.ஐஸ்வர்யா, கோபி, ஈரோடு: 'தமிழகத்தில் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வரும்...' என்கிறாரே, பா.ஜ.,வின் அமித்ஷா?

அது அவரது கனவு; என்றுமே பலிக்காது!

*******

எல்.மூர்த்தி, கோவை: கட்சியை சீரமைக்கும், காங்., பிரியங்காவின் முயற்சி, அக்கட்சியின் வளர்ச்சிக்கு கை கொடுக்குமா?

அதற்கான முதிர்ச்சியும் அவரிடம் இல்லை; பெரிய தலைகளைத் தாண்டி, அவரால் சாதிக்கவும் முடியாது!

******

ம.வசந்தி, திண்டிவனம்: சட்டசபையில் வெளியேற்றப்படும் எம்.எல்.ஏ.,களை, குண்டுகட்டாக துாக்கிச் செல்லும் முறையை மாற்ற மாட்டார்களா?

வெளியேற்றப் படுபவர்களுக்கு கால் இல்லையா அல்லது சபையை மீறித்தான் நடப்பரா... எதுவும் கிடையாது; எல்லாமே, 'டிராமா' தான்!

******

சிவராம சுப்ரமணியன், திருநெல்வேலி: திருப்பூரில் ஆங்காங்கே, ஹிந்தியில் அறிவிப்பு பலகை தென்படுவது குறித்து...

நம்மூர்க்காரர்கள், உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை. திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவரையே பணி அமர்த்த வேண்டியுள்ளது. அவர்கள் படிக்க வசதியாக, ஆங்காங்கே ஹிந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது!

******

டி.ரவீந்திரன், சென்னை: தமிழகத்தில், அனைத்து வசதிகள் இருந்தும், சீன கார் நிறுவனம், தன் தொழிற்சாலையை தெலுங்கானாவில் அமைக்க முடிவெடுத்திருப்பது, ஏன்?

இங்குள்ள அரசியல்வாதிகள், 'கட்டிங் ரேட்'டை அதிகப்படுத்தி விட்டனர் என்பதாலேயே, இங்கு வரவேண்டிய வெளிநாட்டு தொழிற்சாலைகள், மற்ற மாநிலங்களுக்கு சென்று விடுகின்றன!






      Dinamalar
      Follow us