sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 15, 2024

Google News

PUBLISHED ON : டிச 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெய். முருகப்பா, காரைக்குடி: அந்துமணியாரிடம் உதவியாளராக வர விரும்பும் என் நண்பனின் ஆசையை நிறைவேற்றுவீர்களா?

நானே, பொறுப்பாசிரியருக்கு உதவியாளர் தானே!

வி. திருமுகில், கள்ளக்குறிச்சி: 'இயற்கை பேரிடர்களுக்கு, நாமே காரணம்.உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள், தங்கள் கடமைகளைப் பற்றி கவலைப் படுவதில்லை...' என்ற, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் ஆதங்கம் சரிதானே!

மிகச் சரியே! பொது வெளியில் சமூக அக்கறையுடன் செயல்பட, நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!

* எஸ். பழனிவேல், திருமாளம், திருவாரூர்: அமைச்சர் பொன்முடி மீது, மக்கள் சேற்றை வீசியது, ஆட்சிக்கு எதிரான அவர்கள் புரட்சியின் ஆரம்பமா?

இருக்கலாம்; மக்கள் அவ்வளவு விரக்தி அடைந்துள்ளனர்!

* பெ. பொன்ராஜபாண்டி, மதுரை: 'அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?

பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராச்சே... முதல்வர் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும்!

க.கல்பனா, சென்னை: நம் நாட்டில், எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதற்கு வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லையே...

அரசியல்வாதிகளுக்கும் வயது உச்சவரம்பு, மிக அவசியம். இளைய சிந்தனைகள் நாட்டை வழிநடத்த வேண்டும், பெரியவர்களின் ஆலோசனையுடன்!

த.சிந்தாமணி, வெண்கரும்பூர்: மது பாட்டிலின்விலையை, பல மடங்கு உயர்த்தினால், மது பிரியர்கள் குடிக்காமல் இருப்பரா?

இருக்கவே மாட்டார்கள்; சம்பாதிக்கும் மொத்த பணத்தையும், குடியிலேயே செலவிடுவர்!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'மாணவியரிடம் அத்துமீறினால், இனி, ஆசிரியர் வேலை பறிபோகும்...' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கூறியிருப்பது குறித்து...

மிக நல்ல உத்தரவு; மிகச் சரியாக அமல்படுத்த வேண்டும்!

பி.ஜி.பி. இசக்கி, சென்னை:கோபத்தை குறைக்கணுமா, ஒழிக்கணுமா?

ஒழித்துவிட வேண்டும். பொறுமையாக இருந்தால், மலையளவு பிரச்னையையும் சமாளித்து விடலாம்!






      Dinamalar
      Follow us