sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 10, 2024

Google News

PUBLISHED ON : நவ 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.வசந்தி, திண்டிவனம்: இரு மொழிக் கொள்கை, மூன்று மொழிக் கொள்கை என்று, சர்ச்சைப் பேச்சு இருந்த போதிலும், இன்றைய மாணவர்களிடம், ஒரு மொழி புலமை கூட இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம்?

ஆட்சியாளர்கள்!

ஆர்.பிச்சுமணி, சென்னை: தமிழ்நாட்டில், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், தலை சாயம் பூசிக் கொள்பவர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள், முதிர்ச்சியான தோற்றத்தில் இருந்தால் பெருமை. சாயம் பூசுவது ஏன் என்று தெரியவில்லையே...

சாயம் மட்டுமா பூசிக் கொள்கின்றனர்... 'விக்'கும் வைத்துக் கொள்கின்றனரே!

* நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'கூட்டணிக்கு வருவோருக்கு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு...' என, விஜய் கூறி இருக்கிறாரே...

கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்; தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதும் தெரிந்திருக்கிறதே!

மு. நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும், உதயநிதி, முழு மதிப்பெண் வாங்குகிறார்...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...

அவர்களே, அவர்களுக்கு, 'மார்க்' போட்டுக் கொள்கின்றனர்.

நா.முஸ்தபா, கீழக்கரை: ஊழல் கறை படிந்தவர்களையும், வேலை செய்யாதவர்களையும் பணியிலிருந்து நீக்கும்படி, மத்திய அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும், பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளாரே...

மிக மிக நல்ல உத்தரவு! மாநிலங்களுக்கும் இதை அமல்படுத்தினால் நல்லது!

ஜே.எஸ்.சரவணன், மதுரை:நம், 'தினமலர்' நாளிதழில், தினமும் வெளியாகும், 'இது உங்கள் இடம்' பகுதியில், 'இ - மெயில்' கடிதங்கள் மட்டும் தான் இடம் பெறுமா?

இன்லேண்டு, கவர் மற்றும் கார்டு என, எதில் எழுதினாலும், கருத்துள்ள கடிதங்களுக்கு எப்போதும் இடம் உண்டு!

* ஜெ.ரவிக்குமார், காங்கேயம்:'இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க முடியுமா?' என, தேர்தல் கமிஷனை, நீதிமன்றம் கேட்டுள்ளதே...

தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை; 'அதிகாரம் கொடுங்கள்...' என, நீதிமன்றமே ஆணையிட்டால், அது நடக்கும்!

ஏ.எம்.எம்.ரிஸ்வான், சென்னை:லென்ஸ் மாமா என்ற பட்டப்பெயர், அவர் எதையும் லென்சை வைத்து, துருவித் துருவி ஆராய்பவர் என்பதாலா அல்லது சோடாபுட்டி கண்ணாடி போட்டிருப்பார் என்பதாலா?

அவர், போட்டோகிராபர் என்பதால்!






      Dinamalar
      Follow us