sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.மொவன்குட்டி, கோவை: அந்துமணியாரே... நீங்கள் ஹிந்தி கற்று கொண்டது, கல்லுாரி பருவத்திலா... இல்லை, சமீபத்தில் தானா?

பள்ளியில் படிக்கும் போதே!



ரா.சுப்ரமணியன், மதுரை: சென்ற வாரம் டிராபிக் போலீஸ் அனைவரும் நல்ல நண்பர்கள் என்றும், அனைவரையும், 'கவனித்து' விடுவதாகவும் கூறியிருந்தீர்கள். என்ன மாதிரி, 'கவனிப்பு' சார்?


என் சட்டையின் இடது பக்க பையிலிருந்து தான்!

* கே.நாகராஜன், ராமநாதபுரம்: வாசகர்களிடமிருந்து கேள்விகளே வராவிட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி ஒரு நிலை வந்ததில்லை. தினமும், 150 கார்டுகள்; உங்களைப் போல, 'இ-மெயில்' அனுப்புபவர்களின் கேள்விகள் 100 மற்றும் 'இன்லேண்டு' கடிதங்கள் என, 300 கேள்விகள் வருகின்றன. பொறுப்பாசிரியர், வாரம், வெறும் எட்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுத இடம் கொடுத்திருக்கிறார்.

பூவை சுபாவாணன், கோவை: மதிய உணவிற்குப் பிறகு, சிறிது நேரம் உறங்கும் பழக்கம் உண்டா?

மதியம் 1:30 மணி முதல், 3:00 மணி வரை, துாங்கி விடுவேன்!

வி.ராஜா, சென்னை: வெறும், 50 பைசா போஸ்ட் கார்டில் கேட்கப்படும் கேள்விகளை ஏற்றுக் கொள்வீர்களா?

நீங்கள் தானே முதலாளிகள்! 50 பைசா கார்டானாலும், முதலாளிகளுக்கு பதில் அளிக்க வேண்டுமல்லவா!

* டி.ஜெயசிங், கோவை: தமிழகத்தில், 'எங்களுக்கு ஓட்டு போட்டால், மதுவை ஒழிப்போம்...' என்று, எந்தக் கட்சியும் ஏன் கூறுவதில்லை?

அவர்களது தனிப்பட்ட கஜானா நிரம்பாதே!



வி.பிருந்தா, சென்னை:ஒரு காரை, எவ்வளவு காலம் பயன்படுத்துவீர்கள்?


ஒரு லட்சம் கி.மீ., ஓடும் வரை!

எஸ்.சரவணன், நெல்லை:யாரை சிறந்த தந்தை எனக் கூறலாம்?

அளவற்ற செல்வத்தை சம்பாதித்து, தன் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லும், தந்தையை விட, சிக்கனத்தோடும், எளிமையோடும் வாழும் வழியை பிள்ளைகளுக்கு கற்பிக்கும் தந்தை தான், சிறந்த தந்தை என்று கூறலாம்!






      Dinamalar
      Follow us