sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

/

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2025 ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஆக.1: அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை. மேல்முறையீட்டு வழக்கில் இம்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரர் சி.வி.சண்முகத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது.

ஆக.9: பா.ம.க., தலைவராக 2026 ஆக., வரை அன்புமணியே தொடர்வார் என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆக.12: முதியோர், மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுகளுக்கே அரிசி, உள்ளிட்ட ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் 'தாயுமானவர்' திட்டம் துவக்கம்.

ஆக.13: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., மனோஜ் பாண்டியன், தி.மு.க., வில் சேர்ந்தார்.

ஆக.19: முன்னாள் ராணுவத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் துவக்கம்.

ஆக.21: மதுரையில் விஜயின் த.வெ.க., கட்சியின் இரண்டாவது மாநாடு நடந்தது.

ஆக.26: நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்.

* தமிழக அரசு சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.

ஆக.31: டி.ஜி.பி.,யாக (பொறுப்பு) வெங்கடராமன் பதவியேற்பு.



இந்தியா


ஆக.2: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது கர்நாடகா சிறப்பு நீதிமன்றம்.

ஆக.5: காஷ்மீரில் அருந்ததி ராய், சுமந்த்ரா போஸ் புத்தகங்கள் விற்பனைக்கு தடை

ஆக.7: கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களில் மோசடி செய்து பா.ஜ., வெற்றி பெற்றது என காங்., எம்.பி., ராகுல் குற்றச்சாட்டு.

ஆக.8: பீஹார் சீதாமரியில் ரூ. 880 கோடியில் சீதாதேவிக்கு பிரமாண்ட கோயில் கட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல்.

ஆக.9: ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதலில் பாகிஸ்தானின் 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் தெரிவித்தார்.

ஆக.10: 'ஏர் இந்தியா' விமானிகளின் ஓய்வு வயது 58ல் இருந்து 65 ஆக அதிகரிப்பு.

ஆக.14: ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வர் மாவட்டத்தில் கனமழை, நிலச்சரிவு. 65 பேர் பலி.

ஆக.15: நீண்டநேரம் (103 நிமிடம்) சுதந்திர தின உரை நிகழ்த்திய பிரதமரானார் மோடி. தனது முந்தைய சாதனையை (98 நிமிடம், 2024ல்) முறியடித்தார்.

ஆக.20: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் ரேகா குப்தா மீது, சக்ரியா ராஜேஷ் என்பவர் தாக்குதல்.

* 'ஆன்லைன்' விளையாட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்.

* பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கைதான 31 நாளில் தானாக பதவி இழக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்

* யூனியன் பிரதேசங்கள் நிர்வாக திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா தாக்கல்.

ஆக.23: தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க தடை. ரேபிஸ் தாக்கிய நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

* சட்டவிரோத ஆன்லைன், ஆப்லைன் சூதாட்ட வழக்கில் காங்., எம்.எல்.ஏ., வீரேந்திரா கைது. ரூ. 6 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ. 12 கோடி பறிமுதல்.

ஆக.25: பஞ்சாப் கவர்னர் அஜய் குமார் பல்லா, கூடுதலாக நாகாலாந்து கவர்னர் பொறுப்பை ஏற்றார்.

ஆக.26: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை அளிக்க மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

* கப்பல் படையில் ஐ.என்.எஸ்., உதயகிரி, ஐ.என்.எஸ்., ஹிம்கிரி போர்க்கப்பல்கள் சேர்ப்பு.

உலகம்

ஆக.3: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிரஷென்னிகோவ் எரிமலை, 600 ஆண்டுக்குப்பின் வெடித்தது.

ஆக.4: ஏமனில் ஆப்ரிக்க அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது. 68 பேர் பலி.

ஆக.14: இந்தியா - சீனா இடையே 2020க்குப்பின் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

ஆக.15: இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் சியாட்டில் நகரின் முக்கிய சின்னமான 605 அடி உயர 'ஸ்பேஸ் நீடில்' மீது முதன்முறையாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

ஆக.30: ஜப்பானில் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபா - பிரதமர் மோடி சந்திப்பு.

மேகம்... சோகம்

ஆக.6: உத்தரகாண்டின் தாராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு. 100 பேர் பலி.

'சோலார்' புதுமை

ஆக. 19: இந்தியாவில் முதன்முறையாக வாரணாசி ரயில் நிலைய தண்டவாளத்தில் (70 மீட்டர் நீளம்) 'சோலார்' பேனல்கள் பொருத்தப்பட்டன.

அழகின் அழகே

ஆக.19: 'மிஸ் யுனிவர்ஸ்' (இந்திய அழகி) பட்டம் வென்றார் ராஜஸ்தானின் மனிகா.

ஓட்டு திருட்டு புகார்

ஆக. 17: ஓட்டுகளை பா.ஜ., திருடுவதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார். இதை வலியுறுத்தி பீஹாரில் யாத்திரை நடத்தினார்.

டாப் 4

* ஆக. 25: மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) முதன்முறையாக பெண் கமாண்டோ பிரிவு அறிமுகம்.

* ஆக. 29: இந்தியாவில் முதன்முறையாக பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை (2024- 2025) ஒரு கோடியை தாண்டியது

* ஆக. 31: காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் 35 ஆண்டுக்குப்பின் திறப்பு.

* ஆக. 31: சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பு.






      Dinamalar
      Follow us