sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/ வெள்ளியில் உயிர்கள் சாத்தியமா?

வெள்ளியில் உயிர்கள் சாத்தியமா?

வெள்ளியில் உயிர்கள் சாத்தியமா?


PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்ற தேடுதல் நீண்ட காலமாக நடந்து வருகிறது. செவ்வாய், நீர் நிறைந்துள்ள டைட்டன், யுரோப்பா உள்ளிட்ட சில நிலவுகளிலும் உயிர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆனால், பூமிக்கு மிக அருகே இருக்கும் வெள்ளிக் கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

காரணம், அதன் பரப்பளவின் வெப்பம், 464 டிகிரி செல்சியஸ். காற்றழுத்தம் மிக அதிகம், பூமியின் கடலடியில் 900 மீட்டரில் உள்ள அழுத்தத்திற்குச் சமமானது. இதன் வளிமண்டலத்தில் 96 சதவீதம் கரியமில வாயு தான் உள்ளது. இதன் மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை.

வெள்ளியின் தரையிலிருந்து, 48 முதல் 60 கி.மீ. உயரத்தில் மேகங்களுக்கு இடையே சில அடர் புள்ளிகள் நகர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவை பார்ப்பதற்கு பூமியிலுள்ள பாக்டீரியா போல் இருந்துள்ளன.

ஆனால், கந்தக அமிலத்தில் பாக்டீரியாவால் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தீர்க்க அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி பல்கலை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

உயிர்களுக்கு அடிப்படையான 20 விதமான அமினோ அமிலங்களை வெள்ளியின் மேகங்களில் உள்ள அதே செரிவுள்ள கந்தக அமிலக் கரைசலில் வைத்துச் சோதித்தனர். நான்கு வாரங்களுக்குப் பிறகு பார்த்தபோதும் அமினோ அமிலங்கள் சிதையவே இல்லை.

இதன் வாயிலாக, உயிர்கள் உருவாவதற்கு அடிப்படையான சில அமிலங்கள் எவ்வித பாதிப்புமின்றி வெள்ளி யின் மேகங்களில் இருக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

இருந்தாலும் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட வேறு சில அம்சங்கள் வெள்ளியில் இல்லை என்பதால் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகளில் ஒருசாரார் கூறுகின்றனர். இன்னும் தீவிரமான ஆய்வுகள் மேற்கொண்டால் இந்தாண்டின் இறுதியில் உயிரினங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us