/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பராக்கிரம தினம்
/
தகவல் சுரங்கம் : பராக்கிரம தினம்
PUBLISHED ON : ஜன 23, 2026 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பராக்கிரம தினம்
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திரட்டி இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார். இவரது பிறந்த தினமான ஜன. 23, மத்திய அரசு சார்பில் 'பராக்கிரம தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. இவர் 1897ல் ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக, சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். நாட்டுக்காக தன் வாழ்வில் 20 ஆண்டுகளில் ௧௧ முறை சிறையில் இருந்தார். 'ஜெய்ஹிந்த்' முழக்கத்தை மக்களிடம் பதிய செய்தார்.

