/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : சர்வதேச எழுத்தறிவு தினம்
/
தகவல் சுரங்கம் : சர்வதேச எழுத்தறிவு தினம்
PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
சர்வதேச எழுத்தறிவு தினம்
ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேச, எழுத தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 76.5 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்கள். இதில் பெரும்பாலானோர் பெண்கள். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப்.,8ல் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்குவிப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.