sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு

/

சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு

சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு

சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு


PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சன்னிதி தெருவில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் வீடு, மனை, நிலம் வாங்க, விற்க மற்றும் திருமண பதிவு தொடர்பாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், தங்களுடைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை, அலுவலகத்திற்கு முன் நிறுத்தி வந்தனர். தற்போது, அலுவலகத்திற்கு முன் கட்டட கழிவுகள், எம்.சாண்ட் ஆகியவை கொட்டப்பட்டு, சாலையோர கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர், தங்களுடைய வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் நிலை உள்ளது. இதன் காரணமாக, சார் - பதிவாளர் அலுவலகம் வருவோர், வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சார் - பதிவாளர் அலுவலகம் முன் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us