sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 5, 1933

மலேஷியாவில் பணிபுரிந்த, இலங்கை தமிழர் இளையதம்பி கனகசபாபதி - தில்லைநாயகி தம்பதிக்கு மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர் க.கைலாசபதி.

இவர், கோலாலம்பூரில் படித்தார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் இலங்கை வந்த இவர், யாழ்ப்பாணம் ஹிந்து கல்லுாரி, கொழும்பு ராயல் கல்லுாரிகளில் படித்தார். கொழும்புவில் வெளியான, 'தினகரன்' நாளிதழில் உதவி ஆசிரியராக சேர்ந்து, ஆசிரியரானார்.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் பல்கலையில், ஜார்ஜ் தாம்சன் தலைமையில் பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவரது ஆய்வு நுாலை ஆக்ஸ்போர்டு பதிப்பகம் நுாலாக வெளியிட்டது. யாழ்ப்பாண பல்கலை உருவானபோது அதன் தலைவராகி, அதன் வளர்ச்சிக்கு உதவினார்.

உலகின் புகழ் பெற்ற பல்கலைகளில் வருகை பேராசிரியராக பணியாற்றிய இவர், 'அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம்' உள்ளிட்ட பல நுால்களை எழுதினார். 1982, டிசம்பர் 6ல் தன், 49வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us