sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ பல நாடுகளால் வாங்கப்படும் தேர் அலங்கார பொருட்கள்!

 பல நாடுகளால் வாங்கப்படும் தேர் அலங்கார பொருட்கள்!

 பல நாடுகளால் வாங்கப்படும் தேர் அலங்கார பொருட்கள்!


PUBLISHED ON : மார் 18, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2026 02:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, தெற்குவெளி வீதியில், 'அரசவேல் கைவினை தொழிலகம்' என்ற பெயரில், கோவில் தேர்களுக்கான அலங்கார பொருட்களை தயாரிக்கும் அரவிந்த்: தேர் அலங்காரம் என்பது, மதுரையின் தனித்துவமான, பாரம்பரிய தொழில். மீனாட்சி அம்மன் கோவிலுக்காக, இந்த அலங்கார பொருட்களை பாண்டியர் காலத்தில் இருந்தே எங்கள் முன்னோர் செய்து வந்திருக்கின்றனர்.

அந்த பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே, இன்றும் அச்சடிக்கும் முறை களை பயன்படுத்தாமல், கையால் வரையும் முறையையே தொடர்ந்து பின்பற்றுகிறோம்.

நான், இயந்திர பொறியியல் படிப்பு முடித்திருக்கிறேன். ஆனால், சிறு வயது முதலே, அப்பாவுடன் இணைந்து வரையும் தொழிலை ஆர்வத் துடன் கற்றுக் கொண்டேன்.

இந்த தொழிலில் நான் ஈடுபட ஆரம்பித்து, 24 ஆண்டுகள் ஆகின்றன. என் குருநாதர் என் அப்பா தான். இப்போது, குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்த தொழிலை செய்து வருகிறோம்; எங்களிடம், 10 பேர் வேலை செய்கின்றனர்.

சுவாமி ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் குடைகள், தேர் சீலைகள், பாரம்பரிய வடிவங்களுடன் கட்டப் படும் மாலைகள், சுவாமி கிரீடங்கள் , சன்னிதியில் கட்டப் படும் திரைகள் போன்றவற்றையும் தயார் செய்கிறோம்.

கடந்த 2021 சித்திரை திருவிழாவில், மதுரை மீனாட்சி அம்மன் - சொக்கநாதருக்கான பல்லக்கில் கட்டியிருந்த அலங்கார திரைகள், நாங்கள் தயாரித்தது தான்.

திருப்பரங்குன்றம் தேர்த் திருவிழா, திருவானைக்காவல் தேர் அ லங்காரம், சமீபத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகர் கோவிலுக்காக பாண்டியன் கொண்டை என்ற கிரீடம் ஆகியவற்றையும் நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம்.

கடந்த 2016 முதல், திருவண்ணாமலை மூலவருக்கான திரையையும் நாங்கள் தான் செய்து கொடுத்து வருகி றோம்.

கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடம், ஹைதராபாத், விஜயவாடா போன்ற இடங்களில் உள்ள கோவில்களுக்கும் எங்களின் அலங்கார பொருட்களை அனு ப்பி இருக்கிறோம்.

தாய்லாந்து மகா மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு, எங்களிடம் இருந்து தான் அலங்கார பொருட்கள் தற்போது வரை செல்கின்றன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம்.

மதுரையில் பலர் இந்த தொழிலை செய்து வருகின்றனர்; இதனால், கணிசமான போட்டியும் இருக்கிறது.

ஆயினும், மற்றவர் களிடம் இருந்து தனித்துவமாக தெரிய, வித்தியாசமான கலைநயமும், தரமான பொருட்களும் கொண்டு உருவாக்கும் போது, வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவர்.

எந்த தொழிலிலும் நம் வாடிக்கையாளர்கள் திருப்தியடைந்தால், மீண்டும் மீண்டும் தேடி வருவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us