sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க!'

 'ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க!'

 'ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க!'


PUBLISHED ON : ஜன 06, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2026 01:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி, மதிகோன்பாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கத்துக்கான சிறப்பு முகாம் சமீபத்தில் நடந்தது. வாக்காளர் பட்டியல் திருத்த மேற்பார்வையாளரான அரசு செயலர் ஷில்பா, தர்மபுரி கலெக்டர் சதீஸ்ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சில தினங்களுக்கு முன், வாகனம் மூலம் அறிவிப்பு வெளியிட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், கலெக்டர் வந்த பின், விழிப்புணர்வு பேனர்களை ஒட்டும் பணியை நகராட்சி அதிகாரிகள் துவங்கினர்.

இதனால், ஆத்திரமடைந்த கலெக்டர் சதீஸ், 'இப்படி ஒரு முகாம் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத நிலையில் உள்ளது. ஏன் இவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறீர்கள்?' என கடிந்து கொண்டார்.

இதை கேட்ட வாக்காளர் ஒருவர், 'அதிகாரிகள் என்ன தான் திட்டினாலும், ஊழியர்கள் திருந்தவே மாட்டாங்க...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us