PUBLISHED ON : ஏப் 14, 2026 03:22 AM

ஏப்ரல் 14, 1913
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில், 1913ல் இதே நாளில்
பிறந்தவர், என்.ஆர்.தியாகராஜன். பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்த இவர், காந்தியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் பங்கேற்றார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக, 1930 முதல் 1946 வரை, நான்கு முறை கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
சுதந்திரத்திற்கு பின், 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில், தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1968ல், சட்ட மேலவை உறுப்பினராக தேர்வானார்.
அப்போது, தமிழகத்தில் நடந்த காங்., அரசின் முதல்வர் காமராஜரின் நண்பரான இவர், அவரது உதவியுடன் கொடைக்கானலை சுற்றுலா
தலமாக்கினார்; தேனியில் அரசு பொது மருத்துவமனை, மதுரை மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.
பல கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி,
விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கியவர், தன் 56வது வயதில், 1969, ஏப்ரல் 27ல் மறைந்தார். தேனி அரசு மருத்துவமனை, தேனியில் ஒரு சாலை, தேனி கோபாலபுரம் அரசு துவக்கப் பள்ளி
ஆகியவற்றுக்கு, இவரது பெயர் சூட்டி, கவுரவிக்கப்பட்டுள்ளது.
இவரது பிறந்த தினம் இன்று!

