/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்
/
12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்
12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்
12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்
UPDATED : ஏப் 14, 2024 11:12 AM
ADDED : ஏப் 14, 2024 02:20 AM

ராமேஸ்வரம்: மும்பை தனியார் பள்ளியில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீரங்க தேவேந்திரா, ரோநிட் மனோகர் உள்ளிட்ட 10 பேர் அங்கு தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.
இவர்கள், 'ரீலே' முறையில் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர். இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியுடன் நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றனர்.
நேற்று அதிகாலை 12:05 மணிக்கு தலைமன்னார் கடலில் மாணவர்கள் குதித்து நீந்த துவங்கினர். தொடர்ந்து, 38 கி.மீ., நீந்தி நேற்று மதியம் 12:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்தனர். இவர்கள், 11:55 மணி நேரத்தில் நீந்தி கடந்தனர்.

