sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு: கவர்னரின் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், வரும் 25, 26ல் ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் ரவி கூட்டியுள்ளார். இதில், துணைவேந்தர்கள் பங்கேற்பரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள், நிச்சயம் பங்கேற்க மாட்டார்கள்.

டவுட் தனபாலு: அந்த துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை ஜனாதிபதியும் கலந்துக்க இருக்காரு... நீங்களோ, போகக் கூடாதுன்னு மிரட்டுறீங்க... போகாம இருந்தால், துணை ஜனாதிபதியை அவமதித்தது மாதிரி ஆகிடும் என்பதால், துணைவேந்தர்கள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறாங்க என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!



மூத்த தலைவர் ப.சிதம்பரம்: நேஷனல் ஹெரால்டு வழக்கில், பணமோசடி அல்லது நிதி முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டவுட் தனபாலு: சரி விடுங்க... நீங்கதான் சட்டமும் படிச்சிருக்கீங்களே... நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் சார்புல நீங்களே ஆஜராகி, அவங்க மீது குற்றமில்லைன்னு நிரூபிக்கலாமே... இதன் வாயிலா, அவங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாங்க... கட்சியில உங்களுக்கும், உங்க மகனுக்கும் முக்கிய பதவிகள் தேடி வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



வி.சி., கட்சி தலைவர் திருமா வளவன்: தமிழக மின்வாரியத்தில் மட்டும், 65,000 காலி பணியிடங்கள் உள்ளன. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், தட்டச்சுப் பணிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பல ஆயிரம் பேர் உள்ளனர். 'மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தெரிவித்துள்ளது. அதன்படி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: என்னமோ, 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தந்த வாக்குறுதிகள் எல்லாத்தையும் நிறைவேற்றி விட்ட மாதிரியும், இந்த வாக்குறுதியை மட்டும் மறந்துட்டது மாதிரியும் சொல்றாரே... 'தி.மு.க., நிறைவேற்றாத வாக்குறுதிகள்'னு பட்டியல் போட்டா, பெரிய புத்தகமே போடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us