/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தார்பாய் மூடி செல்லும் லாரிகள்
/
தார்பாய் மூடி செல்லும் லாரிகள்
PUBLISHED ON : டிச 22, 2025 05:24 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார், கமுதி பகுதியில் எம். சாண்ட், சவடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் தார்ப்பாயால் மூடி செல்கின்றனர்.
தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் எம்.சாண்ட், சவடுமண் ஏற்றப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்காகவும்,ரோடு பணிகளுக்காகவும் செல்கிறது.
மண் ஏற்றி செல்லும் சில லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றனர். இதனால் காற்று வீசும் போது லாரியில் இருந்து துாசி பின்னால் வரும் வாகனங்கள் மீதும் ரோட்டிலும் விழுகின்றன.
இதனால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது மணல் ஏற்றி வரும் ஏராளமான லாரிகளில் தார்ப்பாயால் மூடப்பட்டு கொண்டுவரப்படுகின்றன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒருசில லாரிகளில் மட்டும் மூடப்படாமல் கொண்டு வருவதால் போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

