PUBLISHED ON : பிப் 06, 2026 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கொட்டகுடி அங்கன்வாடி மையச் சுவரில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்தது. அத்துடன் சுகாதார மற்ற சூழலும் நிலவி யதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்கினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல், துணை அலுவலர் முத்துக்குமார், ஒன்றிய பணி மேற் பார்வையாளர் நிவேதா, ஊராட்சி செயலாளர் கணேசன் ஆய்வு செய்து விரிசலை சரிசெய்யவும், புதர், கழிவு நீரை அகற்றவும் உத்தரவிட்டனர்.

