sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'

/

தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'

தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'

தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'


PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்று, 1951ல் துவங்கப்பட்ட 'தினமலர்', இன்று, தமிழகத்தின் மிகப்பெரிய நாளிதழாகவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்தில் நிலைத்த இடத்தையும் பிடித்துள்ளது. மொத்தமாய், 75 ஆண்டுகள்! இது வெறும் கால எண்ணிக்கை அல்ல; உண்மைக்கான போர், மக்கள் நலனுக்கான உறுதி, தமிழ் மொழியின் பெருமைக்கான அர்ப்பணிப்பு. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வரலாறு.

எனக்கும் தினமலர் நாளிதழுக்குமான தொடர்பு, நான் கோவை கல்லூரியில் பயின்ற காலத்தில் துவங்கியது. கல்லூரி மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கல்லூரி விழாக்கள் குறித்த செய்தி வெளியிடுவதற்காக தினமலர் நாளிதழ் நிறுவனத்துடன் துவங்கிய தொடர்பு, இப்போது எங்களது நிறுவனத்தின் வளர்ச்சியின் வழியாகவும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தோடு பல புதிய யுக்திகளை தினமலர் மேற்கொண்டு வருவதை நானும் கண்டு வருகிறேன்.

தினமலர் நாளிதழின் பயணம், தமிழ் ஊடக உலகின் பொற்காலம். சுதந்திர இந்தியாவின் துவக்கத்தில், மக்களின் குரலை ஒலிக்க வைத்தது. அவசரநிலை காலத்தில், உண்மையை மறைக்க முடியாது என்று துணிச்சலுடன் நின்றது. புயல், வெள்ளம், பேரிடர் என எப்போது மக்கள் துயரத்தில் ஆழ்ந்தாலும், முதல் உதவி போல செய்திகளை வழங்குகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் எந்தத் துறையிலும் மக்களுக்கு துணையாக இருக்கிறது. 'செய்தி மட்டுமல்ல, சேவையும் முக்கியம்' என்பதை நிரூபித்து வருகிறது. தினமலர் நாளிதழின் நம்பகத்தன்மையே அதன் தனித்தன்மை. போலி செய்திகளின் காலத்தில், உண்மைக்கு முதலிடம். அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மிகம் எல்லாவற்றிலும் சமநிலை.

தமிழ் நாளிதழ்களில் வண்ண புகைப்படங்களை முதன்முறையாக கொண்டு வந்த பெருமை தினமலர் நாளிதழையே சாரும். குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சென்றடையும் வகையில், உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம். இ-பேப்பர், ஆப், சமூக வலைதளங்கள் என டிஜிட்டல் யுகத்திலும் முன்னோடி. தினமலர் வெறும் நாளிதழ் அல்ல; தமிழர்களின் கலாசார அடையாளம். பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு, குடும்ப உரையாடல்களில் தினமலர் பக்கங்கள் இவை தமிழக வாழ்வின் அங்கம்.

இந்த பவள விழாவில், தினமலர் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தில் 100 ஆண்டுகளை நோக்கி, உண்மை, நேர்மை, தமிழ் அன்புடன் தொடரட்டும்.

தினமலர் வாழ்க! தமிழ் வாழ்க!

அன்புடன்,

முரளி என் பட்

நிர்வாக இயக்குனர்,

கீதம் வெஜ் ரெஸ்டாரன்ட்ஸ் பி., லிட்.,






      Dinamalar
      Follow us