PUBLISHED ON : மார் 01, 2026 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலச்சரிவுக்கு காரணம்
நிலச்சரிவு என்பது இயற்கை, மனித நடவடிக்கை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து மண், பாறை பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி சரிவதை குறிக்கிறது. இது புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகம்பத்தின் விளைவாக ஏற்படுகிறது. அப்போது வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கிறது. நிலச்சரிவு ஏற்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டசில நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது.

