PUBLISHED ON : பிப் 28, 2026 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏன் நீல நிறம்
சர்.சிவி.ராமன் கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியபோது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது'' என யோசித்தார். இதற்கு 1928 பிப்.,28ல், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார். இத்தினமே (பிப். 28) தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறத்தால் கடல் நீர் நீல நிறமாக தெரிகிறது' என கண்டுபிடித்தார். 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

