sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

ரகசியம் என்ன?

/

ரகசியம் என்ன?

ரகசியம் என்ன?

ரகசியம் என்ன?


PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தேர்தல் நெருங்கினாலே, அரசியல்வாதிகளின் மனது இளகி விடுகிறது. மக்களின் மீது பாசம் பொங்குகிறது...' என, கிண்டலாக பேசுகின்றனர், பீஹார் மக்கள்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, நாளை மற்றும் வரும் 11ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், நிதிஷ் குமார் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்; வாக்காளர்களிடம் மிகவும் உருக்கமாக பேசி, ஓட்டு சேகரித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், 'பீஹார் மக்களுக்காக, 20 ஆண்டுகளாக நேர்மையாகவும், கடின உழைப்புடனும் பணியாற்றி வருகிறேன். என் குடும்பத்துக்காக அல்ல; அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறேன்...' என, கண்ணீர் மல்க பேசினார்.

இதைப் பார்த்த பீஹார் மக்கள், 'ஓட்டு வாங்குவதற்காக உருக்கமாக பேசும் அரசியல்வாதிகளின் மனது, ஆட்சிக்கு வந்தவுடன் இரும்பாக மாறி விடும் ரகசியம் என்ன...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us