இருமுடி : மிக விரைவில் 100 கோடி பெற்ற ரவி தேஜா படம்
தெலுங்குத் திரையுலகத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு நடிகர் எனப் பெயரெடுத்தவர் ரவி தேஜா. அவர் கதாநாயகனாக நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க கடந்த வாரம் வெளியான படம் 'இருமுடி'. இப்படம் மிக விரைவில் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
ரவி தேஜா நடித்து வெளியான ஒரு படம் இவ்வளவு சீக்கிரத்தில் 100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை. மேலும், இந்தப் படத்திற்காக எந்தவிதமான டிக்கெட் கட்டண உயர்வும் தெலுங்கு மாநிலங்களில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சாதாரண டிக்கெட் கட்டணத்திலேயே இப்படி ஒரு வரவேற்பைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆன்மிகப் பின்னணியில், ஐயப்ப பக்தராக ரவி தேஜா நடித்திருப்பதுதான் இந்தப் படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.
150 கோடி வசூலை இந்தப் படம் நிச்சயம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.