உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எஸ்பிபி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் மோகன்லாலுக்கு பதிலாக.. ; இயக்குனர் பிரியதர்ஷன் ஆதங்கம்

எஸ்பிபி மட்டும் உயிரோடு இருந்திருந்தால் மோகன்லாலுக்கு பதிலாக.. ; இயக்குனர் பிரியதர்ஷன் ஆதங்கம்


மலையாள திரையுலகின் பிரபலமான இயக்குனர் பிரியதர்ஷன் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் சமீபத்தில் ஹிந்தியில் 'பூத் பங்களா' திரைப்படம் வெளியாகி உள்ளது. விரைவில் தனது நூறாவது படமாக மலையாளத்தில் மோகன்லாலை வைத்து அவர் படம் இயக்க இருக்கிறார். தனது முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து படம் இயக்கிய பிரியதர்ஷன் தனது நூறாவது படத்திலும் அவரையே கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார் என்பது ஆச்சரியம் தான். இந்த படம் இசைய மையமாக வைத்து உருவாக இருக்கிறது. படத்தில் கிட்டத்தட்ட 12 பாடல்கள் இடம்பெற உள்ளது எனக் கூறியுள்ளார் பிரியதர்ஷன்.

“இதில் தந்தை-மகன் இருவருமே கர்நாடக இசைக் கலைஞர்கள். ஒருவேளை எஸ்.பி பாலசுப்பிரமணியம் சார் உயிருடன் இருந்திருந்தால் அவரைத்தான் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருப்பேன் என்று கூறியுள்ளார், மேலும் மோகன்லால் இதற்கு முன்பு சில படங்களில் பாடியிருந்தாலும் கூட என்னுடைய இந்த நூறாவது படத்தில் அவரை நான் பாட வைக்கப் போவதில்லை. இது முழுக்க முழுக்க இசையை மையப்படுத்திய படம் என்பது தான் காரணம்” என்றும் கூறியுள்ளார்.

தந்தை, மகன் கதை என்பதாலும் ஒருவேளை எஸ்பிபி இருந்தால் தந்தையாக அவரை நடிக்க வைத்திருப்பேன் என பிரியதர்ஷன் கூறி இருப்பதாலும் அந்த தந்தை கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடிக்கிறாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !