sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

பணம் சேர்ந்த வழி

/

பணம் சேர்ந்த வழி

பணம் சேர்ந்த வழி

பணம் சேர்ந்த வழி


ADDED : ஆக 20, 2025 01:42 PM

Google News

ADDED : ஆக 20, 2025 01:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸமூது சமுதாயத்தை திருத்த வந்தவர் நபி ஹஜ்ரத் ஸாலிஹ். அவரிடம் ஒருமுறை அந்த சமுதாயத்தின் தலைவர், ''அதிசயத்தை நீங்கள் நிகழ்த்துங்கள். அப்போது தான் உங்களை நபியாக ஏற்போம். இங்குள்ள மலையில் இருந்து இளம் ஒட்டகம் ஒன்றை வரவழைத்து குட்டி ஈனச் செய்யுங்கள்'' என்றார். அதன்படி ஸாலிஹ் நபியும் ஒட்டகத்தை வரவழைக்க அது குட்டியை ஈன்றது. பின்னர் தாயும், குட்டியும் அருகில் இருந்த காட்டில் மேய்ந்து விட்டு திரும்பின.

பிறகு நபி, ''ஒட்டகத்தை தொந்தரவு செய்யாதீர். சுதந்திரமாக இருக்க விடுங்கள்'' என வேண்டுகோள் விடுத்தார். அந்த ஒட்டகமோ அதிசய பிராணியாக இருந்தது. மக்கள் குடிக்கும் கிணற்று நீரை ஒரே மூச்சில் காலி செய்தது. கிணறு வற்றியது. இதற்காக ஒரு யோசனையை நபி சொன்னார். ''ஒருநாள் நீங்களும், மறுநாள் ஒட்டகமும் கிணற்று நீரை பயன்படுத்துங்கள்'' என்றார். இதன்பின் பிரச்னை தீர்ந்தது.

ஒட்டகம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்தளவுக்கு அது பாலைக் கொடுத்தது. அதன் மூலம் மோர், வெண்ணெய், நெய் தயாரித்து விற்றனர். இதனால் பணம் சேரவே ஸமூது சமுதாயத்தினர் பணக்காரர்களாக மாறினர்.






      Dinamalar
      Follow us