
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
* அவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.
* அவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
* அவனைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.
*எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, அவன்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.