
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷமுள்ள ஜாதகத்தை தேடிப் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ராஜபாளையம் அருகிலுள்ள சேத்துார் கண்ணீஸ்வரர் கோயில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்ய தோஷம் தீரும். திருமணம் முடிந்த பின்னர் தம்பதியராக வந்து முருகனை தரிசிக்கின்றனர்.
மன்னர்களான வீரபாகு பாண்டியனுக்கும், விக்கிரம சோழனுக்கும் பகை இருந்தது. பாண்டியன் மீது பலமுறை போர் தொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. எனவே பாண்டியனைக் கொல்ல சதி செய்து பாவத்திற்கு ஆளான சோழனுக்கு பார்வை போனது. மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் என்ற ஊரிலுள்ள சிவபெருமானை வழிபட்டான். அங்கு ஒரு கண்ணில் பார்வை ஏற்பட்டது.
அவனது கனவில் சிவபெருமான் தோன்றி, தனக்கு கோயில் கட்டினால் இன்னொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்கும் என தெரிவித்தார். அதன்படி சேத்துாரில் கோயில் கட்டி பார்வை கிடைக்கப் பெற்றான். கண்ணொளி கொடுத்த சிவன் 'திருக்கண்ணீஸ்வரர்' என பெயர் பெற்றார்.. கண்நோய் உள்ளவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் இங்குள்ள பூர்ணகலா, புஷ்கலாவுடன் உள்ள அய்யனார் சன்னதியில் இருமுடி கட்டுகின்றனர். வியாபாரம் செழிக்கவும், குடும்ப பிரச்னை தீரவும் தெற்கு நோக்கியுள்ள அனுமனுக்கு பூஜை நடத்துகின்றனர்.
எப்படி செல்வது: ராஜபாளையம் - செங்கோட்டை ரோட்டில் 10 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ரா அபிஷேகம், பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:15 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 96003 48204
அருகிலுள்ள கோயில்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் 25 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: காலை 6:30 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 04563 - 260 254