தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பைரவர் பிரசாதம்

பைரவர் பிரசாதம்

பைரவர் பிரசாதம்


ADDED : மே 31, 2024 10:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 10:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரமண மகரிஷியின் குடிலுக்கு பக்தர் ஒருவர் வந்தார்.

தாம்பாளம் ஒன்றில் அல்வாவை வைத்து விட்டு வணங்கினார். நெய்யும், முந்திரியும் கலந்த அல்வாவின் வாசனை மூக்கை துளைத்தது. ரமணரிடம் பிரசாதம் வாங்க காத்திருந்த போது நாய் ஒன்று வந்தது. விரட்ட முயன்ற பக்தரிடம், ''பாவம்... விரட்டாதே. அதுவும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே'' என்றார் ரமணர்.

இதையே தனக்கு கிடைத்த உபதேசமாக கருதிய பக்தர் விலகி நின்றார். சிறிது அல்வாவை நாய்க்கு ரமணர் கொடுக்க நாய் அதை கவ்வியபடி ஓடியது. மீதி அல்வாவை நாய்க்கு கொடுத்ததால் 'இது பைரவர் பிரசாதம்' என சொல்லி அனைவருக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us