தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 14, 2024 01:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 01:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* திருச்சியில் அருள்புரியும் சிவனின் திருநாமம் தாயுமானசுவாமி. இவருக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்றும் பெயருண்டு.

* பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக இருப்பது காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்தியப்பர், அம்மன் ஞானப்பூங்கோதை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகார பூஜை செய்வர்.

* பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை திருமந்திரம். இதை இயற்றியவர் திருமூலர்.

* மகாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாகப் பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

* முருகப்பெருமானின் வரலாறான கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.

* பெருமாள் மீது ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யபிரபந்தம். இதை தொகுத்தவர் நாதமுனிகள்.

* கண்ணன் மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

* சிவபக்தரான ராஜராஜச் சோழன் தஞ்சாவூரில் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். இவருக்கு சிவபாதசேகரன் என்னும் சிறப்பு பெயருண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us