sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 15, 2024 11:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 11:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*தர்மம் தலை காக்கும் என்பது ஏன்?

ஜே.கார்த்திக், காரைக்குடி, சிவகங்கை.

பலன் கருதாமல் செய்யும் தர்மம் தலையெழுத்தை மாற்றும். இதையே 'தர்மம் தலை காக்கும்' என்றனர்.

*விரதத்தன்று சிலர் உப்பு சேர்ப்பதில்லையே...

எல்.புவனேஷ், பகாட் கஞ்ச், டில்லி.

சுவை மட்டுமின்றி காம, குரோத எண்ணத்தையும் உப்பு தரும். இதை தவிர்க்க உப்பு சேர்ப்பதில்லை.

*விரதத்தன்று சாப்பிடாமல் இருந்தால் போதுமா...

எஸ்.வர்ஷிகா, குளச்சல், கன்னியாகுமரி.

விரதத்தின் நோக்கம் சுயகட்டுப்பாடு. பசி பொறுப்பதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களை அடக்குவது அவசியம்.

*வெள்ளியன்று பசுவைப் பார்த்தால் நல்லதாமே...

வி.சந்தோஷ், மாகடி, பெங்களூரு

வெள்ளியன்று அதிகாலையில் பசுவை தரிசிப்பதுடன் வலம் வந்து வணங்கினால் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்னை தீரும். நிம்மதி கிடைக்கும்.

*கோயில் பிரகாரத்தில் துாங்கலாமா?

கே.சுபாஷினி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி

கோயில் பிரகாரத்தில் ஓய்வுக்காக உட்காரலாம்.

*வேண்டுதல் வைத்து வழிபாடு செய்கிறேன். இன்னும் நிறைவேறவில்லையே...

எம்.மித்ரா, வால்பாறை, பொள்ளாச்சி

நியாயமான வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். பிறருக்கு தீங்கு நினைத்தால் எதிர்மறை பலன் உண்டாகும்.

*அஷ்டமி தவிர்த்த மற்ற நாளில் பைரவரை வழிபடலாமா...

எல்.ஷிவானி, சின்னமனுார், தேனி.

பைரவர் உள்ளிட்ட எந்த தெய்வத்தையும் எந்த நாளிலும் வழிபடலாம்.

*கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் முரணாக பேசுவோரிடம் எப்படி பழகுவது?

ஏ.சங்கர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

இது போன்ற கெட்ட குணங்கள் கொண்டவர்களை விட்டு விலகுங்கள்.

*அஹம் பிரம்மாஸ்மி என்றால் என்ன?

பி.ஹரிணி, இலஞ்சி, தென்காசி.

'உனக்குள்ளே கடவுள் இருக்கிறார்' அல்லது 'நானே கடவுள்' என்பது இதன் பொருள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us