உயரம் வித்தியாசப்படுவது ஏன்?
காலையில் அளவிடும் நம் உடலின் உயரத்தை, மீண்டும் இரவில் அளவிட்டால் குறைவாக (1 முதல் 2 செ.மீ., வித்தியாசம்) இருக்கும்.
இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும்.
புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப செயல்படும் நம் முதுகெலும்பு தான் இதற்கு காரணமென ஆய்வுகள் கூறுகின்றன.
துாக்கத்துக்குப் பின் காலை எழுந்ததும் முதுகெலும்புக்கு அழுத்தம் குறைவாக இருக்கும்.
அடுத்து நடப்பது, அமர்வது என நாள் முழுதும் வேலைபார்க்கும் போது, புவிஈர்ப்பு விசையால் நம் முதுகெலும்பு சற்று கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது.
இது இரவில் துாங்கும் போது இயல்புக்கு திரும்புகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.