இப்போதே திட்டமிட்டால் முதுமை இனிமை தான்
முதுமையை மகிழ்ச்சியாக அனுபவிக்க, நாம் சில விஷயங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
முதலில், வங்கி கணக்குகள், காப்பீடு, நகைகள், நிலம், கடன் விவரங்கள் போன்றவை, தெளிவாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சொத்து விவகாரம் சட்ட சிக்கல்களாக மாறி பல குடும்பங்களில் உறவுகளை தொலைத்து, சொத்துக்களும் முடங்கி இருப்பதை காண்கிறோம்.
உயில் எழுதிவிட்டால் உடனே எல்லாம் மாறிவிடும் என்றல்ல. எப்போது அவர்கள் கைக்கு சொத்து அல்லது பொறுப்பு செல்ல வேண்டும் என்பதை உயிலில் தெளிவுபடுத்த முடியும்.
வங்கி கணக்கு மட்டுமின்றி மருத்துவ விவரங்கள், அதுசார்ந்த கோப்புகளையும் பத்திரமாக ஒரே இடத்தில் வைக்க வேண்டியது அவசியம்.
ஒரே டாக்டர் அல்லது மருத்துவமனையை அணுகும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அவசர சமயங்களில் நம் உடல்நிலை குறித்து அறிந்து சிகிச்சையளிக்க எளிதாக இருக்கும்.
அந்த இடம் பற்றி குறைந்தது ஒரு நம்பகமான நபருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அவசர பட்டியல் ஒன்றை தயாரித்து, அதில் மகன், மகள், முக்கிய உறவினர்கள், அண்டை வீட்டார், டாக்டர் போன்ற எண்களை எழுதி, எளிதாக எடுக்குமிடத்தில் வைத்திருக்க வேண்டும்.
முதியோர் தனியாக வசிக்கும் வீடுகளில், கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா பொருத்திக்கொள்வதும், பணியாளர்கள் இருப்பின் அவர்களின் முழு விவரங்களை எழுதி வைப்பதும் அவசியம்.
நகை மதிப்பு அதிகம் என்பதால் அதனால் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளது. நகைகளை வீடுகளில் வைக்காமல் இருப்பது பாதுகாப்பானது.