sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

/

அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

அமெரிக்கர்களையே பாதிக்கும்: இந்தியா மீதான வரிவிதிப்புக்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு

13


ADDED : ஆக 28, 2025 04:39 PM

Google News

13

ADDED : ஆக 28, 2025 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததற்கு அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது அமெரிக்கர்களையே பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புறவு, அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் சமீப காலமாக பதற்றத்தில் உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகளுக்கு பரஸ்பர வரியை அவர் விதித்துள்ளார். அந்த வகையில், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தார். இது, கடந்த 7ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக, 25 சதவீத வரியை விதித்தார். இது, நேற்று அமலுக்கு வந்தது. இந்த கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது என கூறிய நம் வெளியுறவு அமைச்சகம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக விளக்கமளித்தது.

இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கை தொடர்பான குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் மீது வரி விதிக்காமல், இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்து வருகிறார். இது அமெரிக்கர்களையே பாதிக்கும். வளர்ச்சிபெற்று வரும் இந்தியா அமெரிக்கா உறவை நாசப்படுத்தும். இது உக்ரைனைப் பற்றியது அல்ல போல் தெரிகிறது.

ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் எந்தவொரு நாட்டுக்கும் தடை விதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை டிரம்ப் நிர்வாகம் தேர்வு செய்து இருந்தால் அது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தியா மீது மட்டுமே கவனம் செலுத்தும் முடிவு, எல்லாவற்றிலும் குழப்பமான கொள்கையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் சீனா அதிக தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால், அந்நாடு தண்டனையில் இருந்து விடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us