ADDED : அக் 29, 2025 07:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட ஜூடோ போட்டி நடந்தது.
இதில் மேலுார் ஜாஸ் பள்ளி மாணவர்கள் 11 பேர் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
இம் மாணவர்களை பள்ளித் தாளாளர் ஜெயந்த் வேத சாம், முதல்வர் ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் பிரசன்னா, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலா,சுரேஷ், கண்ணன், ஜோதி பாராட்டினர். மாணவர்கள் கிருத்திகா, ஜனனி, முகமது சைபுல்லா, தஸ்வின்,புகழ், மனோஜ், கஜகேஸ்வரன், பிரித்தீஸ், ஸ்ரீ தேசன், தமிழரசன், கோபிகா ஸ்ரீ தங்கம் வென்றனர். மாணவர்கள் திவேஷ், ஹர்ஷிதா, மதுரேஷ், அனுஷ்கா, பிரீத்தி, ஹாசினி, ஜெய கிஷோர், மிதுலன் வெள்ளியும், மாணவர்கள் தர்ஷன், பரண், தேஜாஸ்ரீ, தர்ஷிகா, சந்தோஷ், கோகுல பிரசன்னா, எஸ்வந்த் ராஜ், செல்லியன், ரகுராம், சுபாஷ் வெண்கலமும் வென்றனர்.

