sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பைக் மீது ஆட்டோ மோதல் 2 வாலிபர்கள் பலி

/

பைக் மீது ஆட்டோ மோதல் 2 வாலிபர்கள் பலி

பைக் மீது ஆட்டோ மோதல் 2 வாலிபர்கள் பலி

பைக் மீது ஆட்டோ மோதல் 2 வாலிபர்கள் பலி


ADDED : அக் 29, 2025 07:34 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டபல்லாபூர்: சரக்கு ஆட்டோ மோதியதில், பைக்கில் வேலைக்கு சென்ற இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூர் துபகெரே கிராமத்தை சேர்ந்தவர்கள் நந்தன், 22, ரவிகுமார், 24. இவர்கள் இருவரும் தொட்டபல்லாபூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டனர். நந்தன் பைக்கை ஓட்டினார்.

தொட்டபல்லாபூர் அருகே ராமயனபாளையா பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென முதியவர் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க, நந்தன் பைக்கை திருப்பினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் சறுக்கியது.

இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர். பின்னாள் வந்த சரக்கு ஆட்டோ, நந்தன், ரவிகுமார் மீது ஏறியது. தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் பரிதாபமாக இறந்தனர். தொட்டபல்லாபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us