ஓட்டலில் சக பாடகியுடன் நெருக்கம் : மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய நாட்டுப்புற பாடகர்
தெலுங்கு நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்றவர் ஈஸ்வர் சாய். 'பசிங்கா பாலலு' என்ற பிரபலமான தெலுங்கு பாடலின் மூலம் அதிகம் அறியப்பட்டவர். சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்சிகளில் பங்கேற்றார். திரைப்படங்களிலும் நடித்தார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் அவருடன் இசை ஆல்பங்களில் பாடியும், ஆடியும் வந்த மாதுரி ரத்தோர் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இணைந்து உருவாக்கிய ஆல்பம் ஒன்று நேற்று வெளியானது. இந்த வெளியீட்டை கொண்டாடும் வகையில் இருவரும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த தகவல் ஈஸ்வர் ராவின் மனைவிக்கு கிடைத்தும், விரைந்து வந்த அவர் ஈஸ்வர் சாயையும், மாதுரி ரத்தோவையும் கையும் களவுமாக பிடித்தார். இருவரும் அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி நேற்று வைரல் ஆனது.